செய்திகள்

ஆரூணுக்கு கொலை மிரட்டல் - காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு

Published On 2018-10-06 08:23 GMT   |   Update On 2018-10-06 08:23 GMT
முன்னாள் எம்.பி. ஆரூணுக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JMHaroon
சென்னை:

ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் முஸ்லிம் அமைப்பு தேர்தல் நடந்தது.

அப்போது வாக்களிக்க வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஆரூணுக்கும், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அஸ்லம் பாட்சா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக அஸ்லம் பாட்சா ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆரூண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆரூண் ராயப்பேட்டை போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுக்கல்லூரியில் நடந்த முஸ்லிம் அமைப்பு தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன்.

அப்போது வாணியம்பாடியைச் சேர்ந்த அஸ்லம் பாட்சா உள்பட 10 பேர் என்னிடம் தகராறு செய்தனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளேன்.

இதையடுத்து போலீசார் அஸ்லம் பாட்சா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JMHaroon


Tags:    

Similar News