செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கண் துடைப்பு நாடகம்: என்.ஆர்.தனபாலன் அறிக்கை

Published On 2018-10-05 08:34 GMT   |   Update On 2018-10-05 08:38 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கண் துடைப்பு நாடகம் என்று என்.ஆர்.தனபாலன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Petrol #Diesel

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 90 ரூபாயை எட்டிய நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசக்கு எதிரான நிலைப்பாடு உருவானதை கண்டு ரூ.2.50 குறைப்பதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் வரியையும் ரூ.2.50 குறைக்க சொல்லி வலியுறுத்துகிறது.

இது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம். இந்த விலை குறைப்பினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News