செய்திகள்
ஊழலால் கலைக்கப்பட்டது திமுக ஆட்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊழலால் கலைக்கப்பட்டது திமுக ஆட்சி தான் என்றும், அவர்களிடமே ஊழல் குறித்த கேள்விகள் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #DMK #Stalin
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த நிருபர்களின் கேள்விக்கு அதனை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஊழலினால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், ஊழல் குறித்த கேள்வியை அங்கேதான் கேட்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #DMK #Stalin
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த நிருபர்களின் கேள்விக்கு அதனை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசுதான் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஊழலினால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், ஊழல் குறித்த கேள்வியை அங்கேதான் கேட்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #DMK #Stalin