செய்திகள்

சோபியா கைது - தமிழிசைக்கு ஸ்டாலின் பகிரங்க சவால்

Published On 2018-09-03 18:30 GMT   |   Update On 2018-09-03 18:30 GMT
பாஜக ஒழிக என கோஷமிட்ட சோபியா என்ற பெண்ணை தமிழக போலீசார் கைது செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பாஜக தலைவருக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Stalin
சென்னை:

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாஜக ஒழிக என கோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர், 

இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு டுவிட்டரில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக! என பதிவிட்டுள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Stalin
Tags:    

Similar News