செய்திகள்

தேனி அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

Published On 2018-08-24 08:58 GMT   |   Update On 2018-08-24 08:58 GMT
தேனி அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி அருகில் உள்ள பள்ளப்பட்டி முதல் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் குபேந்திரன் (வயது26). இவருக்கும் அவரது அண்ணன் அழகுராஜா என்பவருக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பதில் முன்வி ரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அழகுராஜா கத்தியால் குத்துவதுபோல வந்தார். அதை தடுக்க முயன்றபோது குபேந்திர னுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த குபேந்திரன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

கண்டமனூர் அருகில் உள்ள பொன்னம்மாள்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சிவக்குமார் (40), முத்தையா (30). இதில் முத்தையா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா மகன் ஜெகன் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சிவக்குமார் தனது தம்பி என்றும் பாராமல் முத்தையாவை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தினார். இது குறித்து கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News