செய்திகள்

திண்டுக்கல் அருகே கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தல்

Published On 2018-08-14 11:15 GMT   |   Update On 2018-08-14 11:15 GMT
திண்டுக்கல் அருகே கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டார்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது26). இவரும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மனோகரி (24) என்பவரும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை.

கணவன்-மனைவி இருவரும் குரும்பபட்டியில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று மனோகரியின் உறவினர்கள் அங்கு வந்து தனியாக ஒரு வி‌ஷயம் பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். பின்னர் அவரை காரில் கடத்தி சென்றனர். இது குறித்து விஜய் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது உறவினர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த மனோகரி தன்னை கடத்தியதாக 3 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பொன்னுத்தாய் (55) என்பவரை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தாய் வண்ணக்கிளி, மாமா வாசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News