செய்திகள்

திருவாரூரில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-08-11 12:12 GMT   |   Update On 2018-08-11 12:12 GMT
திருவாரூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் பஸ் நிலையம் அருகே எஸ்.ஆர்.ஆர் தெருவைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி துர்கா (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் துர்கா அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா பட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பட்டு மகன் மணிகண்டன் காதல் திருமணம் செய்ததால் அவரை வர கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் துர்காவை சரமாரி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த துர்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து திருவாரூர் போலீசில் துர்கா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு மணிகண்டனை கைது செய்தனர்.
Tags:    

Similar News