search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தாக்குதல்"

    • பொதுக்குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்திய பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்து, உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரா அருகே உள்ள நாராயண் ராவ் காலனியை சேர்ந்தவர் பானுப்பிரியா (30).

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி ஆகிய 3 பேர் தண்ணீரை வீணடிப்பதை பானுப்பிரியா பார்த்துள்ளார்.

    இதையடுத்து குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனு உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு அறிவுரை கூற நீ யார்? என்று கூறி பானுப்பிரியாவை தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பெண்களும் மேலும் 10 ஆண்களுடன் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் பானுப்பிரியா வீட்டிற்கு சென்றனர். அங்கு பானுப்பிரியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    இதையடுத்து அந்த கும்பல் பானுப்பிரியாவை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து சாலையில் தள்ளி கிரிக்கெட் மட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதில் பானுப்பிரியா பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பொதுக்குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்திய பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்து, உதைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
    • புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 35). சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது.

    இந்தநிலையில் கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் குழந்தையை அழைத்து சென்று விட்டார். கவிதா திருப்பூரில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

    அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு பிரகாஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கவிதாவும் பிரகாசும் சந்தித்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பிரகாஷ், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் கவிதாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியை முடித்துவிட்டு சோனு அருகில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோனுவை வழிமறித்த நவீன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார்.
    • மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக குத்தினார்.

    சென்னை:

    கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு. 20 வயது இளம்பெண்ணான இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ளார்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருகிறார். ஓட்டல் அருகிலேயே விடுதியில் தங்கி உள்ளார்.

    சோனுவுக்கும் சென்னையை சேர்ந்த நவீன் என்ற வாலிபருக்கும் இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். கப்பல் படையில் வேலை செய்வதாக நவீன் கூறியுள்ளார்.

    சோனு, நவீனுடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார். ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட நவீன், சோனுவை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்த காதலை சோனுவிடம், நவீன் வெளிப்படுத்தி உள்ளார்.

    இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சோனு, கொஞ்சம் கொஞ்சமாக நவீனை விட்டு விலகியுள்ளார். இது நவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதன் பின்னர் சோனுவுக்கு போன் செய்து நவீன் மிரட்டலும் விடுத்துள்ளார். அப்போது தன்னை காதலிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியை முடித்துவிட்டு சோனு அருகில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோனுவை வழிமறித்த நவீன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக குத்தினார். சோனுவின் முகத்தை சிதைக்கும் எண்ணத்தில் பல இடங்களில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சோனு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். இதைபார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்தனர்.

    இதனால் பயந்து போன நவீன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சோனுவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சோனுவை பரிசோதித்த டாக்டர்கள் 25 இடங்களில் காயம் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தையல் போடப்பட்டு சோனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நவீனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சோனுவை நவீன் திட்டமிட்டு தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. சோனு வேலை செய்த ஓட்டலுக்கு முன் கூட்டியே வந்து காத்திருந்த நவீன் வேலை முடித்து சோனு விடுதிக்கு சென்ற போது பின்தொடர்ந்து சென்று கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதற்காக பல நாட்கள் நவீன் திட்டமிட்டதும் அம்பலமாகி உள்ளது. சோனுவின் முகத்தில் குத்துவதற்காக காலி மதுபாட்டில் ஒன்றை நவீன் பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனுவை கொலை செய்யும் நோக்கத்தில் நவீன் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சோனு, விமான பணிப்பெண்ணாக ஆசைப்பட்டதும், தன்னை காதலிக்காத காரணத்தால் விமானப் பெண் வேலையில் அவர் சேருவதை தடுக்கும் வகையில் நவீன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    • சில தினங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாலையீடு சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 37 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இந்த தம்பதியருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வினோத்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

    இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு திருமயம் நுழையானூர் சின்னக்கல் வயல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வினோத் குடிபோதையில் சின்னக்கல் வயல் சென்றார். பின்னர் மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த சிவரஞ்சனி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பெற்றோர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த மாறன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார்.

    கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய இளம்பெண்ணை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனி அறையில் தாக்குதல் நடந்ததால் வெளியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவில்லை.
    • வாலிபர் வெளியே சென்ற பின்னரே இளம்பெண்ணை தாக்கி நகை, கம்மலை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.

    போரூர்:

    விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 5-ந்தேதி வாலிபர் ஒருவர் மசாஜ் செய்ய வந்தார். அவரிடம் ரூ.1000 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த 23 வயது இளம்பெண் ஒருவர் அந்த வாலிபருக்கு மசாஜ் செய்து விட்டார். இளம்பெண்ணின் அழகில் மயங்கிய வாலிபர் சிறிது நேரம் கழித்து செக்ஸ் மசாஜ் செய்யும்படி அவரை வற்புறுத்தினார்.

    இதற்கு இளம்பெண் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி அவரது கை, கால்களை கட்டி போட்டார். மேலும் அவர் அணிந்திருந்த செயின் மற்றும் கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    தனி அறையில் இது நடந்ததால் வெளியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவில்லை. வாலிபர் வெளியே சென்ற பின்னரே இளம்பெண்ணை தாக்கி நகை, கம்மலை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது செக்ஸ் மசாஜ் செய்யக் கூறி இளம்பெண்ணை தாக்கி நகையுடன் தப்பியது அனகாபுத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜித் என்கிற சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மசாஜ் விளம்பரத்தை பார்த்து மது போதையில் வந்ததாகவும், செக்ஸ் மசாஜ்க்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெண் ஊழியரை தாக்கி கம்மல், செயினை பறித்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    • இளம்பெண் ஒருவர் வளசரவாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடை ஊழியர்கள் முன்னிலையில் முத்து சரமாரியாக அடித்து உதைத்தார்.

    போரூர்:

    விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வளசரவாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரை, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியரான முத்து (30) என்பவர் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தார். ஆனால் இதனை இளம்பெண் கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் இளம்பெண் வேலை பார்க்கும் ஜவுளிக்கடைக்கு முத்து சென்றார். அங்கு காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடை ஊழியர்கள் முன்னிலையில் அவர் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
    • அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.

    தேவாஸ்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் போர்பதேவ் கிராமத்தில் திருமணமான இளம்பெண், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இவர்களின் வீட்டுக்கு அருகே வாலிபர் ஒருவர் குடியிருந்தார். பக்கத்து வீடு என்பதால், அந்த வாலிபருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.

    இதனால் அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்தார்.

    திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.

    அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.

    அதன்படி, அந்த பெண்ணின் வீட்டை கண்காணித்து வந்த கிராமத்தினர். சம்பவத்தன்று அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர்.

    பின்னர் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அங்கு கிராம மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவரை பெண்ணின் தோளில் ஏற்றி கிராமத்தை சுற்றிவரும்படி கூறினர்.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி அறிந்த தேவாஸ் மாவட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியை கண்டறிந்த போலீசார், போர்பதேவ் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    • ஈஸ்வரி மற்றும் திருநங்கைகள் 3 பேர் சிந்துவிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்தனர்.
    • பெண் உள்பட திருநங்கைகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை :

    கோவை சொக்கம்புதூர் கருப்பணபாதையை சேர்ந்தவர் சத்தியானந்த். இவரது மனைவி சிந்து( வயது 30).

    இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகைக்கு வட்டியும், முதலுமாக சேர்த்து சிந்து பணத்தை கட்டி முடித்ததாக தெரிகிறது.

    ஆனால் கூடுதல் வட்டி தொகை கேட்டு ஈஸ்வரி, சிந்துவிடம் பிரச்சனை செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சிந்து வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஈஸ்வரி மற்றும் திருநங்கைகள் 3 பேர் சிந்துவிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி மற்றும் 3 திருநங்கைகள் சேர்ந்து சிந்து மற்றும் அவரது தாய் சுனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டி சென்றனர்.

    தாக்குதலில் காயமடைந்த சிந்துவும், அவரது தாயாரும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் ஈஸ்வரி மற்றும் 3 திருநங்கைகள் மீது தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரும், இளம்பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது
    • பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை :

    கோவை சித்தாபுதூரை சேர்ந்த 36 வயது இளம்பெண் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் எனது கணவருடன் சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு இளங்கோ நகரில் வசித்து வரும் 48 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் எனக்கு தெரியவரவே நான் எனது கணவரை கண்டித்தேன். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நான் எனது கணவரின் செல்போனை பார்த்தபோது எனது கணவரும், அந்த இளம் பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது இதனைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் .

    இதுகுறித்து நான் என் கணவரிடம் கேட்டபோது மீண்டும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வெளியே தள்ளிவிட்டார். எனவே எனது கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தட்டிக்கேட்ட என்னை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×