செய்திகள்

கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார் - சந்திப்புக்கு பின் ராகுல் காந்தி பேட்டி

Published On 2018-07-31 10:53 GMT   |   Update On 2018-07-31 12:20 GMT
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #RahulGandhi #DMK
சென்னை:

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று வருகை தந்தார்.  ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
Tags:    

Similar News