என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவேரி மருத்துவமனை"
- ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
- செந்தில் பாலாஜிக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடைபயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரிவித்தனர்.
இதையடுத்து கோர்ட்டு அனுமதியின் பேரில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த அவரை நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடை பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.
இன்னும் 20 நாட்கள் வரை அவர் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றும் இயல்பான நிலைக்கு வரும் வரை மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
- எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.
சென்னை:
அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.
எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.
சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். - குடியரசு தலைவர் கோவிந்த் pic.twitter.com/SIcadbrUgg
— President of India (@rashtrapatibhvn) August 5, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்