என் மலர்
செய்திகள்

கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லம் வருகை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி கோபாலபுரம் இல்லம் வந்துள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KalaignarHealth
சென்னை:
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி ஆகியோர் கண்ணீருடன் கோபாலபுரம் வந்தடைந்தனர்.
Next Story