செய்திகள்

மருத்துவமனையில் கருணாநிதியை பார்த்து நலம் விசாரித்தார் துணை ஜனாதிபதி

Published On 2018-07-29 07:06 GMT   |   Update On 2018-07-29 09:13 GMT
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நலம் விசாரித்துள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.  

கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கருணாநிதியை சந்தித்த தகவலை வெங்கையா நாயுடு  தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News