செய்திகள்

செல்லூரில் ஒருதலைக்காதலில் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2018-07-04 12:21 GMT   |   Update On 2018-07-04 12:21 GMT
ஒருதலைக்காதல் கை கூடாத நிலையில் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம். இவரது மகன் அஜித்குமார் (வயது 19). இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு அஜித்குமார் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட தோல்வியில் மனம் உடைந்த அஜித்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News