search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் தற்கொலை"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் ராஜா ரைஸ்மில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் கார்த்திக் (வயது20). இவர் தேனியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்காததால் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கார்த்திக் தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கார்த்திக் தன்னுடன் படித்த போடியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை. இதனால் மாணவியை தேடி சென்றபோது அவர் காதலிக்க மறுத்ததால் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • மிதுன்குமாரை அவரது தாயார் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.
    • மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, கொசப்பாளையம் திருமால் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ரங்கசாமி (வயது53). பைனான்சியர். இவரது சொந்த ஊர் திருப்பூர் ஆகும்.

    இவரது மகன் மிதுன்குமார் (17). இவர் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரங்கசாமியின் தாயார், திருப்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை பார்க்க ரங்கசாமி தனது மனைவியுடன் திருப்பூர் சென்றார்.

    மிதுன்குமார் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே மிதுன்குமாரை அவரது தாயார் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்தார்.

    அவர்கள் வந்து பார்த்த போது உள்ளே மின்விசிறியில் மிதுன்குமார் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். உடனே இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மிதுன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மிதுன்குமார் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை காதலித்து வந்ததும் சில நாட்களாக அந்த மாணவி மிதுன்குமாரிடம் பேசாமல் இருந்ததும் இதனால் மனஉளைச்சல் அடைந்த மிதுன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சஞ்சய் (வயது21). பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரும் புதுப்பேர் அருகே உள்ள சக்திநகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்புஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி சஞ்சய் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரிக்க தொடங்கினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த மாணவர் சஞ்சயின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காதல் திருமணம் செய்த காதலியை பிரித்ததால் மனவேதனையில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சோமங்கலம் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த சஞ்சய் மற்றும் இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் சஞ்சய்யிடம் இருந்து பிரித்து காதலியை அவரது பெற்றோருடனும் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பி.எட். கல்லூரி வளாகத்தில் மாணவர் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • செயல்படாத கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சுப்பள்ளி கிராமம் கோணந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.

    இவரது மகன் குணால் (21). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று மாலை பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பி.எட். கல்லூரி வளாகத்தில் மாணவர் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அப்பகுதியினர் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குணால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செயல்படாத கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரிக்கு சரிவர செல்லாமல் தலைமுடியை அலங்கோலமாக வெட்டி இருந்துள்ளார்.
    • வீட்டில் தனிமையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி குண்டாளீஸ்வரி கோவில் அருகே வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் தரணீஸ்வரன் (வயது18). டி.சிந்தலைச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சரிவர செல்லாமல் தலைமுடியை அலங்கோலமாக வெட்டி இருந்துள்ளார்.

    இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெற்ேறாருடன் பேசாமல் தரணீஸ்வரன் தனிமையில் இருந்தார். நேற்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சண்டையிடுவதை விரும்பாத பாலகிருஷ்ணன் அவர்களை சமாதானப்படுத்தி வந்தார்.
    • எனினும் தகராறு தினந்தோறும் நீடித்து வந்தது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர், மணிகண்டன் நகர், இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களது மகன் பாலகிருஷ்ணன் (வயது19) கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 15 நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது மனைவி கங்கையம்மாள் கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெற்றோர் சண்டையிடுவதை விரும்பாத பாலகிருஷ்ணன் அவர்களை சமாதானப்படுத்தி வந்தார். எனினும் அவர்களது தகராறு தினந்தோறும் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் பிரபாகரனுக்கும் அவரது மனைவி கங்கையம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்ட பாலகிருஷ்ணன் மிகவும் மனவேதனை அடைந்தார்.

    மேலும் கோபமடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை காட்டி 'இதேப்போல் சண்டை போட்டுக்கொண்டால் கத்தியால் குத்திக்கொண்டு நான் இறந்து விடுவேன்' என்று கூறினார்.

    ஆனாலும் இதனை கண்டு கொள்ளாமல் அவரது பெற்றோர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் தனது மார்பில் குத்திக் கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

    இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் மகனை கண்டு கதறி துடித்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தங்களது வீண் சண்டையால் மகன் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து பெற்றோர் கதறி துடித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.
    • போலீசார் நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழிகுமார். இவரது மகன் நிர்மல் குமார் (வயது 25).

    இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்தார்.

    நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அதுபோல் நேற்று காலையில் இருந்து நிர்மல்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது நண்பர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பெற்றோர் தங்களது மகன் செல்போன் எடுக்காமல் இருப்பது பற்றி தெரிவித்தனர்.

    இதையடுத்து நிர்மல்குமார் தங்கி இருந்த அறைக்கு சென்று நண்பர்கள் பார்த்தனர். அப்போது அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அறை கதவை திறக்குமாறு கூறி வெகுநேரமாக நண்பர்கள் கதவை தட்டினர். ஆனால் நிர்மல்குமார் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நிர்மல்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை கண்டு நண்பர்கள் கதறி அழுதனர். உடனடியாக நிர்மல் குமார் பெற்றோருக்கும், ஆட்டையாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சக மாணவ-மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார்.
    • உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் விக்னேஷ்காலனியை சேர்ந்தவர் ஆனந்த ராஜன். இவர் அதே பகுதியில் மருந்தகம் மற்றும் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 22). இவர் ரஷ்யாவில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு லோகேஷ் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது பிறந்தநாள் வருவதையொட்டி அதனை கொண்டாட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறி்த்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்தமணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக இறந்தார்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை ஆதி மூலம் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், ஆசாரி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது ஒரே மகன் சிவானந்த மணி (வயது 21). இவர் திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சில வருடங்களாக சிவானந்த மணி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை.

    இதனால் விரக்தியிலிருந்த சிவானந்த மணி கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசவில்லை. எதையோ இழந்தது போல் இருந்துள்ளார். கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த சிவானந்த மணியிடம் பெற்றோர்கள் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எதுவும் இல்லை எனக்கூறி மறுத்துவிட்டார்.

    இந்த நிலையில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்தமணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் பார்த்து உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    ஒரே மகன் என்பதால் கணேசனும் அவரது மனைவியும் அதிக பாசம் வைத்து சிவானந்த மணியை வளர்த்தனர். ஆனால் மகனின் திடீர் தற்கொலை அவர்களை கதிகலங்க செய்து விட்டது.

    போலீசாரின் உரிய சட்ட நடவடிக்கைக்கு பின் மாணவரின் உடல் குடும்பத்தினரும் ஒப்படைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடந்தன. சுடுகாட்டில் தான் பாசமாக வளர்த்த மகனின் உடலுக்கு கணேசன் மனதை கல்லாக்கி தீ வைத்தார். அப்போது அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இதைத் தொடர்ந்து உறவினருடன் வீட்டுக்கு வந்த கணேசன் சிறு வயதிலேயே மகன் இறந்து விட்டானே என்று புலம்பியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த கணேசன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    மகன் இறந்த சோகம் தீராத நிலையில் தந்தையும் மாரடைப்பால் இறந்தது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் சம்பவத்திற்கு வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்து கொள்ள, மகனின் சாவை தாங்கிக் கொள்ளாத தந்தை மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒருதலைக்காதல் கை கூடாத நிலையில் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம். இவரது மகன் அஜித்குமார் (வயது 19). இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு அஜித்குமார் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது.

    இதில் ஏற்பட்ட தோல்வியில் மனம் உடைந்த அஜித்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×