இந்தியா

குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை

Published On 2024-05-27 06:40 GMT   |   Update On 2024-05-27 06:40 GMT
  • புகையிலை பொருட்களின் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பால் போலீசார் வாகன சோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா முழுவதும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையாக, புகையிலை மற்றும் குட்கா மற்றும் பான் மசாலா உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006 மற்றும் அதன் விதிமுறைகளின்படி, இந்தத் தடை மே 24 முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இந்த முடிவு புகையிலை மற்றும் நிகோடின் நிறைந்த பொருட்களின் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பால் போலீசார் வாகன சோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீசாரின் வாகன சோதனையில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள புகையிலை மற்றும் குட்கா மற்றும் பான் மசாலா உற்பத்தியாளர்களிடையே பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் தெலுங்கானா பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News