செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே கல்குவாரியில் வாலிபர் பிணம்

Published On 2018-06-20 10:27 GMT   |   Update On 2018-06-20 10:27 GMT
ஒட்டன்சத்திரம் அருகே கல்குவாரியில் வாலிபர் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரம் அரண்மனைப்புதூர் பகுதியில் பாறையூர் அரசு புறம்போக்கு இடத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் உள்ள ஒரு பள்ளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

பச்சை நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை. பழக்கனூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குவாரியில் வேலை செய்தவர்கள் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News