செய்திகள்
கும்பகோணம் அருகே சொத்து தகராறில் தந்தை- அண்ணனை தாக்கிய தம்பி கைது
கும்பகோணம் அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே கொத்தன்குடி ரெங்கநாதன் கீழத்தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன்(வயது 53). இவரது தம்பி ராஜாங்கம். இவரது தந்தை ரெங்கநாதன்.
ராஜாங்கம் தனது தந்தை ரெங்கநாதனிடம் அடிக்கடி சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்வாராம். இந்நிலையில் இது குறித்த தகராறில் தனது தந்தையை ராஜாங்கம் தாக்கி உள்ளார். இதை கண்டு தடுக்க வந்த அவரது அண்ணன் சந்திரகாசனையும் ராஜாங்கம் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த சந்திரகாசன் ரெங்கநாதன் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றி சுவாமிமலை போலீசாரிடம் சந்திரகாசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து ராஜாங்கம், கும்பகோணம் மேலத்தெரு ராமலிங்கம் மகன் சிவா, அரியலூர் மாவட்டம் உடையார் தாலுக்கா கம்பிகுளம் பகுதி கோவிந்த சாமி மகன் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் ராஜாங்கத்தை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். #Tamilnews
கும்பகோணம் அருகே கொத்தன்குடி ரெங்கநாதன் கீழத்தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன்(வயது 53). இவரது தம்பி ராஜாங்கம். இவரது தந்தை ரெங்கநாதன்.
ராஜாங்கம் தனது தந்தை ரெங்கநாதனிடம் அடிக்கடி சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்வாராம். இந்நிலையில் இது குறித்த தகராறில் தனது தந்தையை ராஜாங்கம் தாக்கி உள்ளார். இதை கண்டு தடுக்க வந்த அவரது அண்ணன் சந்திரகாசனையும் ராஜாங்கம் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த சந்திரகாசன் ரெங்கநாதன் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றி சுவாமிமலை போலீசாரிடம் சந்திரகாசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து ராஜாங்கம், கும்பகோணம் மேலத்தெரு ராமலிங்கம் மகன் சிவா, அரியலூர் மாவட்டம் உடையார் தாலுக்கா கம்பிகுளம் பகுதி கோவிந்த சாமி மகன் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் ராஜாங்கத்தை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். #Tamilnews