search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து தகராறு"

    • சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார்.
    • வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சிவன்காளை மனைவியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமேஸ்வரியின் மகள் சிவரஞ்சனி (31) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்தது அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக மகள் சிவரஞ்சனி, இவரது கணவர் ஜெயபிரகாஷ் (30), அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன் (30), மதனகோபால் (29), அழகுபாண்டி (34) ஆகியோர் ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சிவன்காளையுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சிவன்காளைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார்.

    சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரிக்கு இரண்டு சொந்த வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தேங்கல்பட்டியில் சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. வீடு கட்டுவதால் பண நெருக்கடியில் இருந்த பரமேஸ்வரி வீட்டின் பெயரில் வங்கியில் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    இதனால் வேறுவழியின்றி மகள் சிவரஞ்சனியின் உதவியை நாடியுள்ளார். அப்போது மகளிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கி தருமாறு கூறி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகள் சிவரஞ்சனி தனது தாய் இரண்டாவதாக சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும், சொத்துக்களை தன்னிடம் இருந்து வாங்கி அவருக்கு கொடுத்து விடுவார் என்ற எண்ணத்திலும், ஏற்கனவே உள்ள வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் தேங்கல்பட்டியிலுள்ள பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று சொத்தை சிவரஞ்சனி பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதிலிருந்து தப்பித்து கொள்ள பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மகள் சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சொத்துக்காக பெற்ற மகளே தனது தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
    • சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35).

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சின்னமணிக்கும், அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனையில் தம்பதியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • நரசிம்மமூர்த்திக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒசக்கோட்டை தாலுகா புறநகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா (வயது 70). இவரது மனைவி முனிராமக்கா (60). இந்த தம்பதிக்கு நரசிம்மமூர்த்தி (50) என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.

    நரசிம்மமூர்த்தி தனது மனைவி பாக்யா, மகள் வர்ஷா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ராமகிருஷ்ணப்பா மற்றும் அவரது மனைவி முனிராமக்கா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனையில் தம்பதியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களின் மகன் நரசிம்மமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாக்யா ஆகியோரிடம் பெங்களூரு மாவட்ட புறநகர் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதண்டி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

    நரசிம்மமூர்த்திக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு ராமகிருஷ்ணப்பா மறுத்துள்ளார். மேலும் தனது சொத்துக்களை மகள்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மமூர்த்தி தனது மனைவி பாக்யா (48), என்ஜினீயரிங் படிக்கும் மகள் வர்ஷா மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோருடன் சேர்ந்து தனது பெற்றோரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த வழக்கில் நரசிம்மமூர்த்தி அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

    • சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • ஜெய்சங்கராவை கைகளால் சரமாரி யாக தாக்கினர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகே பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கரா (வயது 44). விவசாயியான இவருக்கும், அதே பகு–தியைச் சேர்ந்த அவரது உறவினர்களான நந்தகுமார் (32), மோப்பு ரெட்டி (51), வாசுதேவ ரெட்டி (56), உமாசங்கர் (54) ஆகியோருக்கும் சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நந்த குமார், மோப்பு ரெட்டி, உமாசங்கர், வாசுதேவ ரெட்டி ஆகிய 4பேரும் சேர்ந்து ஜெய்சங்கராவை கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரி யாக தாக்கினர். இதில் காயமடைந்த ஜெய்சங்கராவை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு 

    • மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெள்ளை முருகனின் முதுகு பகுதியில் குத்தினார்.
    • பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சொத்து தகராறு காரணமாக, தனது சொந்த அண்ணனை மச்சானுடன் சேர்ந்து கொண்டு கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மருக்காலம் பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன். விவசாயியான இவருக்கு வெள்ளை முருகன் (வயது 35), காந்தி (31) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடு, நிலம் உள்ளது.

    இதை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக தீர்வு காணாமல் பிரச்சனை நீடித்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை ஒரே இடத்தில் இருவரது வீடும் உள்ளதால் அண்ணன், தம்பி இடையே மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த காந்தியின் மச்சான் பூங்குன்றம் (32) என்பவர் வெள்ளை முருகனின் தலை, கால் பகுதிகளை சரமாரியாக தாக்கினார்.

    மேலும், ஆத்திரமடைந்த காந்தியும் தனது பங்குக்கு அண்ணன் வெள்ளை முருகனை தரையில் இருந்த கற்களை கொண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெள்ளை முருகனின் முதுகு பகுதியில் குத்தினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளை முருகனின் மனைவி சந்தியா தடுக்க வந்த வந்தபோது அவரையும் காந்தி சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த வெள்ளை முருகன், அவரது மனைவி சந்தியா ஆகிய 2 பேரையும் உடனடியாக உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சொத்து தகராறில் அண்ணனை, தம்பி கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (75). இவரது மகன் ராசு (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி (50).

    நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாவாயி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த பாவாயி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது மகன் ராசுவும் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த ராசுவின் மனைவி சாந்தியும் வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்றுள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். சாந்தியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அப்போது அங்கு பாவாயி தூக்கில் தொங்கிய நிலையிலும், ராசு வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாந்தியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாந்திக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாந்தியும் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ராணி வயது (63), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது மகன் இளங்கோவன் (47). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் ரெயில் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது கால் துண்டானது. இதையடுத்து அவருக்கு மரத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் மது போதைக்கும் அடிமையானார். இதனால் அடிக்கடி குடிபோதையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாய் ராணியின் பெயரில் உள்ள 1, 822 சதுர அடி காலி வீட்டு மனையை உறவினர் ஒருவருக்கு விற்று விடலாம் என இளங்கோவன், ராணியிடம் கூறினார். அப்போது ராணி கையெழுத்திட மாட்டேன் என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் தனது செயற்கை காலை கழற்றி, ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் ராணிக்கு தலை உள்பட பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் மண்டையில் பலமான அடி விழுந்ததால் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை கைது செய்தனர். சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் மாமியார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. அவரது மனைவி மேரி டெய்சி (வயது 72). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இவரது கணவர், முதல் மகன் இறந்து விட்டனர். 2-வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு 2-வது தளத்தில் மேரிடெய்சி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரிடெய்சி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது குன்னூரில் வசித்து வரும் அவரது மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்தபோது கூலிப்படை ஏவி தனது மாமியாரை கொல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படைகளாக செயல்பட்ட நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் மெரி டெய்சியின் மூத்த மகன் அந்தோணி சேவியரை 2-வதாக திருமணம் செய்தேன். எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின் நான் குன்னூர் சென்று விட்டேன். அங்கு உயர்தர நாய்கள் விற்பனை செய்து வருகிறேன்.

    எனது மாமியார் வீடு, நிலங்களை வாங்கி விற்பது போன்ற தொழில்கள் செய்து வருகிறார். நான் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டேன். அவர் பிரித்து தரவில்லை.

    மேலும் நான் வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் அவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக என்னிடம் வேலை செய்யும் நெல்லையை சேர்ந்த ராஜேஷ் (27) என்பவரிடம் உதவி கேட்டேன். ரூ.15 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறினேன். எங்களது திட்டம் படி கடந்த 13-ந் தேதி ராஜேஷ் தலைமையில் 4 பேர் புதுவைக்கு வந்து மேரி டெய்சியை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    எனது மாமியாருக்கு பலரிடம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருப்பதால் நான் கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்தேன். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரபெக்கா ரோஸ்லின் நிஷா உள்பட 4 பேர் காலாப்பட்டு சிறையிலும், சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வையாபுரி (வயது 85). இவருக்கு பூமாலை, துரைராஜ் (வயது 55) என்கிற 2 மகன்களும், சகுந்தலா என்ற 1 மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மூத்த மகன் பூமாலை இறந்துவிட்ட நிலையில், 2-வது மகன் துரைராஜூடன், வையாபுரி வாழ்ந்து வருகிறார். இதனிடையே இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, துரைராஜின் மனைவி மல்லிகா மற்றும் அவரது மகன் கோபி, மகள் சத்யா ஆகியோர் நேற்றிரவு காமக்காபாளையத்திற்கு சென்று விட்டனர்.

    இதனால் தந்தை, மகன் இருவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சொத்து சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    பின்னர் துரைராஜ் வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் குடிபோதையில் படுத்து தூங்கினார். இதையறிந்த தந்தை வையாபுரி, வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை கொண்டு மகன் துரைராஜின் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் துரைராஜ் துடி துடித்து பரிதாபமாக பலியானார்.

    மகன் உயிரிழந்ததை அறிந்த வையாபுரி, கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி போலீசார், கொலையான துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, வையாபுரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சினையில் பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம், கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
    • படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பிராடிஸ் ரோடு, பகுதியை சேர்ந்தவர் மங்கை லட்சுமி (வயது84). இவரது மகள் ராணி (61). மங்கைலட்சுமியின் தம்பி கூத்து என்ற குமரகுரு (72). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமரகுரு அருகில் கிடந்த சுத்தியலால் மங்கைலட்சுமி, அவரது மகள் ராணி ஆகியோரை தலையில் பலமாக தாக்கி கொல்ல முயன்றார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×