செய்திகள்
மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் 76 வயது மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
உசிலம்பட்டி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.
இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.
இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews