செய்திகள்

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டுவிழா

Published On 2018-05-09 16:24 GMT   |   Update On 2018-05-09 16:24 GMT
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கல்லூரி வளாகத்தில் 3 ஆய்வகங்கள், 8 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் சு.குணசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்த கட்டிடம் ஒரே நேரத்தில் சுமார் 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்படுவதாகவும், மேலும், இதுபோன்ற கல்லூரி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) இந்திராணி, பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News