search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional classroom"

    • திருச்சுழி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன.
    • நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பகவான் ரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    450 பேர் படிக்க வேண்டிய பள்ளி கட்டிடத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இட நெருக்கடி யால் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பின்தங்கிய பகுதியான திருச்சுழியில் கல்வி தொடர வந்துள்ள மாணவர்கள் மத்தியில் இட நெருக்கடியால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    பள்ளியில் 600 முதல் 700 பேர் வரை படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போதைய கல்வியாண்டில் மேலும் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது 60 முதல் 70 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பெரும்பாலான மாணவர்கள் இருக்கையிலும், இடம் பற்றாக்குறை காரணமாக தரையிலும் அமர்ந்து கல்வி கற்றுக்கொள்வதால் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துகிறது.

    மேலும் போதிய இட வசதி இல்லாமல் இட நெருக்கடியால் பள்ளியின் வெளியே உள்ள சாலையின் நடுவே காலை பிரார்த்தனையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விளையாட்டு மைதானம், ஆய்வக வசதியும் இல்லாமல் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் இங்கு அரசு பள்ளியில் போதிய இடம் வசதியில்லாத காரணத்தினால் மாணவர்கள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

    ஆகவே திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டினார்.
    • இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட அரும்பூர் கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா யூனியன் சேர்மன் முகமது முக்தார் தலைமையில் நடந்தது.

    கவுன்சிலர் கதிரவன், வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இதுகுறித்து ஏற்கனவே மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவ மாணவிகள் நெருக்கடியில் படித்து வந்தனர்.

    இது குறித்து ஏற்க னவே மாலைமலர் நாளி தழில் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 24 கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதன்படி தேவிபட்டினம் தொடக்கப்பள்ளியில் 2, பெரியபட்டினம் தொடக்கப்பள்ளி வடக்கு பகுதியில் 2, தெற்கு பகுதியில் 2, மண்டபம் தொடக்கப்பள்ளியில் 2, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சித்தூர் வாடி ஊராட்சி வெட்டுகுளம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2, திருவாடானை ஒன்றியத்தில் முள்ளி முனையில் 2, நம்புதாளையில் 4, முகில்தகம் 2, முதுகுளத்தூரில் 2, கடலாடி ஒன்றியத்தில் சிக்கல் 2, ஏர்வாடி நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் என மொத்தம் 24 வகுப்பறைகள் கட்டப்படுகிறது.

    இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கீழப்பூங்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி வருவதாக விழாவில் கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பங்களிப்பு மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களில் வளர்ச்சி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் வளர்ச்சிபணிகள் நடைபெறுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் சிறப்பாக கல்வி பயில அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி வருகிறார்.

    அதன்படி கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றிய அரசு மாதிரி பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ரூ. 24 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கீழப்பூங்குடி ஊராட்சி மன்றத்தலைவி சண்முக வள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கல்லூரி வளாகத்தில் 3 ஆய்வகங்கள், 8 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் சு.குணசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

    இந்த கட்டிடம் ஒரே நேரத்தில் சுமார் 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்படுவதாகவும், மேலும், இதுபோன்ற கல்லூரி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) இந்திராணி, பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×