search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மாதிரி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
    X

    கீழப்பூங்குடி அரசு மாதிரி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.

    அரசு மாதிரி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

    • கீழப்பூங்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி வருவதாக விழாவில் கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பங்களிப்பு மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களில் வளர்ச்சி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் வளர்ச்சிபணிகள் நடைபெறுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் சிறப்பாக கல்வி பயில அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி வருகிறார்.

    அதன்படி கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றிய அரசு மாதிரி பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ரூ. 24 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கீழப்பூங்குடி ஊராட்சி மன்றத்தலைவி சண்முக வள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×