search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malamalar"

    • கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இதுகுறித்து ஏற்கனவே மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவ மாணவிகள் நெருக்கடியில் படித்து வந்தனர்.

    இது குறித்து ஏற்க னவே மாலைமலர் நாளி தழில் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 24 கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதன்படி தேவிபட்டினம் தொடக்கப்பள்ளியில் 2, பெரியபட்டினம் தொடக்கப்பள்ளி வடக்கு பகுதியில் 2, தெற்கு பகுதியில் 2, மண்டபம் தொடக்கப்பள்ளியில் 2, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சித்தூர் வாடி ஊராட்சி வெட்டுகுளம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2, திருவாடானை ஒன்றியத்தில் முள்ளி முனையில் 2, நம்புதாளையில் 4, முகில்தகம் 2, முதுகுளத்தூரில் 2, கடலாடி ஒன்றியத்தில் சிக்கல் 2, ஏர்வாடி நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் என மொத்தம் 24 வகுப்பறைகள் கட்டப்படுகிறது.

    இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×