search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur"

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் -17, திருப்பூர் தெற்கு -26, கலெக்டர் அலுவலகம் -29, மடத்துக்குளம் -3, தாராபுரம்-2, மூலனூர்-1,குண்டடம் -17, உப்பாறு அணை-14, நல்லதங்காள் ஓடை-2, உடுமலைப்பேட்டை- 3.30, அமராவதி-4, திருமூர்த்தி அணை -5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, காங்கயம்-6, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-2, வட்டமலைக்கரை அணை -3, பல்லடம்-29. மாவட்டம் முழுவதும் மொத்தம் 167.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    • அரசு அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.


    தாசில்தார் மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தியேட்டரில் ஆய்வு செய்த காட்சி

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • தேர்தல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது
    • டி.ஆர். பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்

    2024ல் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் படியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் (poll booth agents) கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தி.மு.க.வின் மாநாட்டை போல சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அவருடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முக்கிய மாலை நாளிதழான 'மாலைமலர்' பிரதியை ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தார்.

    மாலைச்செய்திகளை எளிமையாகவும், நடுநிலையுடனும் முந்தி தருவதில் தமிழ்நாட்டின் முதன்மையான நாளேடான, தினத்தந்தி குழுமத்தின் 'மாலைமலர்', முதல்வர் கையில் இடம்பெற்றிருந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • திருப்பூரில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
    • பயணிகள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூா் மண்டல பொது மேலாளா் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், சேலம் ஆகிய ஊா்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆகவே, பயணிகள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் குமார்நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    அதன்படி குமார் நகர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர, டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ்காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகரில் மின் வினியோகம் இருக்காது.

    சந்தைபேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம்ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன்மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்ங்காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம்ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய பகுதிகளிலும்

    கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்துக்குட்பட்ட பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ரெயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன.
    • பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ெரயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன. இதன்காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது நகரப்பகுதியில் வாகன நெரிசலை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூலிபாளையம், அணைப்பாளையம், தோட்டத்து ப்பாளையம், எஸ்.ஆர்.சி., மில் பகுதியில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நொய்யலிலும் புதிய பாலம் கட்டப்பட்டது.

    அணைப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் ரங்கநாதபுரம் பகுதியில் இருந்து துவங்கி ெரயில்வே பாலமாகவும், நொய்யல் பாலமாகவும் நீட்டித்து மங்கலம் ரோட்டை சென்றடையும் வகையில் பெரிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. குறிப்பாக அணைப்பாளையம் கிராமம் மாநகராட்சியில் இருந்தும் தொடர்பு இல்லாத பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது.

    பாலம் அமைக்கும் பணி துவங்கிய போது நிலம் எடுக்க மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கோர்ட்டு வழக்கு காரணமாக பாலம் பணி பாதியில் நிற்கிறது. கடந்த 2009ல் தொடங்கிய சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நிலம் எடுப்பு விவகாரத்தில் சுமூகமாக தீர்வு கிடைத்துள்ளதால் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:- அணைப்பாளையம் பாலம் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நிலம் எடுப்பு விவகாரம் காரணமாக இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. நிலம் எடுப்புக்கான இழப்பீடு வழங்க ஒரு கோடி ரூபாய் தேவையென அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் இருந்ததால் திருத்திய திட்டமதிப்பீடு தயாரிக்க வேண்டும். திட்ட மதிப்பீடு தயாரானதும் அதற்கான நிர்வாக அனுமதியும் பெற்று புதிய டெண்டர் நடத்தி, பணிகள் விரைவில் துவங்கப்படும். ரிங்ரோடு பகுதியில், ெரயில்வே பாலமும் நொய்யல் ஆற்றுப்பாலமும் ஒரே பாலமாக அமையும் போது போக்குவரத்து நெரிசல் குறையும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில் ரெயில் பாதையை கடந்து மேம்பாலம் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் இதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் தற்போது எஸ்.ஆர்.சி., மில்ஸ் பாலம் கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது. பாலம் முடிவடையும் சூர்யா நகர் பகுதியில் அணுகு சாலையாக தார் ரோடு அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

    இதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பி மண் கொட்டி சமன் செய்யும் பணி நடக்கிறது. பாலம் துவங்கும் இடத்தில் சாய்வு தளத்தில் கற்கள் பதிக்கும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.பாலம் முழுவதும் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்க கேபிள் இணைப்பு அளித்து விளக்கு கம்பங்கள் அமைக்கும் வகையிலும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் எனத்தெரிகிறது.

    • பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.
    • பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும்.
    • இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் சார்பில் குமரன் கல்லூரியில் நாளை 4-ந்தேதி மெகா வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும் முகாமில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி., மற்றும் பிற துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள, 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

    முகாமில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளுக்காக, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி பஸ் இலவசமாக இயக்கப்பட உள்ளது.மேலும், விவரங்களுக்கு கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர்கள் 9942878094, 9790201617 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கல்லூரி முதல்வர் வசந்தி தெரிவித்தார்.

    • பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.
    • 228 பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்ல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 013-2014-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 228 பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
    திருப்பூர்:

    நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில்  எஸ்.டி.பி.ஐ.கட்சி சாா்பில்  வருகிற  30 ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் பஷீா் அகமது  நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    தமிழகத்தில் நூல் விலை ஏற்றம் காரணமாக பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பஞ்சு பதுக்கலில் ஈடுபடும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும். பருத்தி ஆடைகளுக்கான டிராபேக்கை 10 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் திருப்பூரில் வருகிற  30-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

    மேலும் திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு, கரூா், சேலம் ஆகிய கொங்கு மண்டலங்களில் உள்ள அனைத்து தொழில் துறையினரையும் ஒருங்கிணைத்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

    அப்போது மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தெற்கு மாவட்டத் தலைவர்ஹாரிஸ் பாபு, மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது, வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் பாபு, எஸ்.டி.டி.யு. வடக்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், மற்றும் கட்சியின் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    ×