செய்திகள்

விழுப்புரம் வந்த பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்

Published On 2018-04-26 15:02 GMT   |   Update On 2018-04-26 15:02 GMT
விழுப்புரம் வந்த பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்தது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

திருச்சி பீமராஜ் நகரை சேர்ந்தவர் மல்லையாராஜ். இவர் அந்த பகுதி மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு மல்லையாராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அரசு பஸ்சில் விழுப்புரம் வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை பஸ் விழுப்புரம் பஸ்நிலையம் வந்தது. அப்போது மல்லையாராஜ் தனது குடும்பத்தினருடன் கீழே இறங்கினார். மல்லையாராஜ் மனைவியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகை மாயமாயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பஸ்சில் தூங்கும்போது யாரோ? அவர் கழுத்தில் இருந்த நகையை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
Tags:    

Similar News