search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் நகை அபேஸ்"

    தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பார்வதி (வயது70). இவர் சம்பவத்தன்று முக்காணியில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ்சில் வந்தார். 

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது நகையை மர்ம நபர் அபேஸ் செய்துவிட்டான். பறிபோன நகையின் மதிப்பு ரூ.51 ஆயிரம். 

    இதுபற்றி தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் மங்கல விநாயகர்கோவில் தெருவில் வசிப்பவர் லாரன்ஸ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 59) மகள் ‌ஷன்மதியுடன் இரவில் வீட்டில் படுத்திருந்தார்.

    அப்போது அவர்களது வீட்டு பின்பக்க கதவை உடைத்து யாரோ உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மாடக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சைராஜன் (65) தனது மனைவி பொற்செல்வியுடன் அங்குள்ள கோவிலுக்குச் சென்றார். அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொற்செல்வி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×