செய்திகள்

நாமக்கல் அருகே மது போதையில் தகராறு செய்த கூலி தொழிலாளி கைது

Published On 2018-04-16 11:00 GMT   |   Update On 2018-04-16 11:00 GMT
நாமக்கல் அருகே மது போதையில் தகராறு செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கபிலர் மலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 55). கூலி தொழிலாளி. இவர் தொட்டியம் தோட்டம் என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்தும், அவர் அந்த பகுதி வழியாக நடந்து சென்ற பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நல்லூர் போலீசார் மது போதையில் இருந்த ரவியை உடனடியாக கைது செய்தனர்.

Tags:    

Similar News