செய்திகள்
சித்ரா பவுர்ணமி விழா - திருவண்ணாமலைக்கு 640 சிறப்பு பஸ்கள் இயக்கம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 640 சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 பஸ்களும், தாம்பரத்தில் இருந்து 100 பஸ்களும் மற்றும் அடையாறு, பூந்தமல்லி பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களில் இருந்து தலா 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 பஸ்களும், தாம்பரத்தில் இருந்து 100 பஸ்களும் மற்றும் அடையாறு, பூந்தமல்லி பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களில் இருந்து தலா 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.