search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்ரா பவுர்ணமி விழா"

    • சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
    • மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலான மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு ஹோமமும்,

    அதனைத்தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனையும், 6.30 மணியளவில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 10 மணி வரை நடை திறந்திருந்திருந்தது.

    சென்னிமலை நகர மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளில் வித, விதமான உணவு பண்டங்களை தயார் செய்து மலைக்கோவிலுக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மணிமலை மீது அமைந்துள்ள மணி மலை கருப்பராயன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது.

    இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நடப்பு ஆண்டில் 94ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.
    • 4-ந் தேதி விநாயகர் பூஜை, சித்ரகுப்தர் சிறப்பு அலங்காரம், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் ஸ்ரீசித்ரகுப்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் நடக்கும் விழாவில் 6 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.

    நடப்பு ஆண்டில் 94ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.வருகிற 4-ந் தேதி விநாயகர் பூஜை, சித்ர குப்தர் சிறப்பு அலங்காரம், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. மறுநாள் சிறப்பு யாகசாலை பூஜை, சித்தி விநாயகர், சித்ரகுப்தருக்கு கலச அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.கூனம்பட்டி திருமடம் நடராஜசுவாமி தலைமையில், ஸ்ரீசித்ரகுப்தர் பூஜைகள் நிறைவு பெற்றதும், கதை படிக்கும் நிகழ்வு அன்னம்படைத்தல், மகாதீபாராதனை நடைபெறும்.காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீசித்ரகுப்தர் ஆலய விழா குழுவினர், மாத பவுர்ணமி பூஜை குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • இந்த ஆண்டுக்கான விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேனி:

    தமிழக-கேரள எல்லை யில் அமைந்துள்ள மங்கள தேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    மங்களதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தமிழகம் மற்றும் கேரள மக்களால் கொண்டாட ப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் தமிழக மற்றும் கேரள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல், கழிப்பிட வசதி, பாதைகளை செப்பனி டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பக்தர்களின் வசதிக்காக கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும். இருமாநில வனத்துறையினர் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகள் அமைப்பது, பக்தர்கள் 5 லிட்டர் குடிநீர் பாட்டில் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ×