search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை பகுதியில்"

    • பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (22ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட கரட்டு ப்பாளையம், செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், சில்லாங்காட்டு வலசு, திப்பம்பாளையம், வசந்தம்நகர், ஆலமரம், புஞ்சை பாலதொழுவு, வெங்கமேடு, ஓலப்பாளையம், ராசாபாளையம், குப்பம்பாளையம், கொடுமணல், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.
    • வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள்

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் சுற்று வட்டார கிராம பகுதகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்த அச்சத்தை போக்கும் வகையில் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு, ஈங்கூர், சிறு க்களஞ்சி உள்பட பல்வேறு இடங்களில் இரவு முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.

    தொடர்நது கிராமப்பு ற ங்களில் தனி யாக உள்ள வீடுகள், வய தான தம்பதி கள் வசிக்கும் வீடுகள் மற்று ம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் போலீசார் சென்று பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    இதற்காக ''ஸ்மார்ட் காவலர்'' என்ற செல்போன் செயலி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்தந்த பகுதியில் இருந்து போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்ற வேண்டும்.

    இதன் மூலம் எந்த போலீசார் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு ரோந்து பணியின் போது போட்டோ எடுத்து உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

    வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிய நள்ளிரவு நேரத்திலும் அவர்களை எழுப்பி புகைப்படம் எடுத்து செயலி மூலம் பதிவேற்றி வருகின்றனர்.

    கிராமப்புறங்க ளில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,

    பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.
    • மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. பொது மக்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை கொட்ட தொடங்கியது. நேற்று மாலை 3.30 மணி அளவில் வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.

    சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் ரோடுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. வேக மாக கொட்டிய மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    விவசாயிகள் இந்த மழை மிகுந்த பயன் உள்ளது எனவும், நெல் நடவு பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு,

    ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம்,

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி,

    முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம்,

    பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்திராண்டிபாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதனால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர்,

    பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம்,

    ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
    • மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலான மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு ஹோமமும்,

    அதனைத்தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனையும், 6.30 மணியளவில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 10 மணி வரை நடை திறந்திருந்திருந்தது.

    சென்னிமலை நகர மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளில் வித, விதமான உணவு பண்டங்களை தயார் செய்து மலைக்கோவிலுக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மணிமலை மீது அமைந்துள்ள மணி மலை கருப்பராயன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது.

    இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை:

    சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வானில் கருமேகம் திரண்டன. பின்னர் 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது.

    சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை பகுதியில் பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பல இடங்களில் ரோட்டோர மரங்கள் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. சென்னிமலை பகுதியில் நேற்று 10 மி.மீ. மழை பெய்தது.

    • சென்னிமலை பகுதியில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.
    • இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் மாவட்ட த்தில் உள்ள வனப்பகுதி மற்றும் தோட்டங்களில் உள்ள மரம், செடி காய்ந்து வருகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் ஒரு சில பகுதி காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இதே போல் சென்னி மலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்த மான நிலங்களில் வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் தீ விபத்து ஏற்படும் சம்ப வங்கள் அடிக்கடி நடை பெற்று வருகிறது.

    மேலும் கடந்த வாரம் சென்னிமலை பகுதியில் 2 இடங்களில் காயந்து கிடந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னிமலை பகுதியில் மீண்டும் ஒரே நாளில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.

    சென்னி மலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி ஒட்டன் குட்டை மயில் கரடு, முருங்கத்தொழுவு பகுதி சூலைப்புதுார், சென்னி மலை பேரூராட்சி குப்பை கிடங்கு என 3 பகுதிகளில் செடி, கொடிகள் வறண்டு கிடந்தது.

    அப்போது அந்த பகுதிகளில் ஒரே நாளில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த புல் மற்றும் செடி, கொடிகள் எரிய தொட ங்கியது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு நிலைய அலு வலர் முத்துசாமி தலை மையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:

    சென்னிமலை பகுதியில் இது வரை இல்லாத அளவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 49 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளோம்.

    சில இடங்களில் தீய ணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழை களை கொண்டு தீயை அணைத்து வருகிறோம். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் அதனை அணைக்காமல் வீசி விட்டு செல்வதால் இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

    எனவே தற்போது வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு தீ விபத்து ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை டவுன், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடி புதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    ×