search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் தீ விபத்து
    X

    சென்னிமலை பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் தீ விபத்து

    • சென்னிமலை பகுதியில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.
    • இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் மாவட்ட த்தில் உள்ள வனப்பகுதி மற்றும் தோட்டங்களில் உள்ள மரம், செடி காய்ந்து வருகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் ஒரு சில பகுதி காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இதே போல் சென்னி மலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்த மான நிலங்களில் வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் தீ விபத்து ஏற்படும் சம்ப வங்கள் அடிக்கடி நடை பெற்று வருகிறது.

    மேலும் கடந்த வாரம் சென்னிமலை பகுதியில் 2 இடங்களில் காயந்து கிடந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னிமலை பகுதியில் மீண்டும் ஒரே நாளில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.

    சென்னி மலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி ஒட்டன் குட்டை மயில் கரடு, முருங்கத்தொழுவு பகுதி சூலைப்புதுார், சென்னி மலை பேரூராட்சி குப்பை கிடங்கு என 3 பகுதிகளில் செடி, கொடிகள் வறண்டு கிடந்தது.

    அப்போது அந்த பகுதிகளில் ஒரே நாளில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த புல் மற்றும் செடி, கொடிகள் எரிய தொட ங்கியது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு நிலைய அலு வலர் முத்துசாமி தலை மையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:

    சென்னிமலை பகுதியில் இது வரை இல்லாத அளவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 49 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளோம்.

    சில இடங்களில் தீய ணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழை களை கொண்டு தீயை அணைத்து வருகிறோம். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் அதனை அணைக்காமல் வீசி விட்டு செல்வதால் இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

    எனவே தற்போது வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு தீ விபத்து ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×