search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை பகுதியில்  2-வது நாளாக கொட்டிய மழை
    X

    சென்னிமலை பகுதியில் 2-வது நாளாக கொட்டிய மழை

    • வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.
    • மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. பொது மக்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை கொட்ட தொடங்கியது. நேற்று மாலை 3.30 மணி அளவில் வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.

    சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் ரோடுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. வேக மாக கொட்டிய மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    விவசாயிகள் இந்த மழை மிகுந்த பயன் உள்ளது எனவும், நெல் நடவு பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×