செய்திகள்

2½ கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2018-04-09 10:03 GMT   |   Update On 2018-04-09 10:03 GMT
மதுரை மாவட்டம் நாகமலை அருகே 2½ கிலோ கஞ்சா விற்றதாக, பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை கருப்பு கோவில் நாடக மேடை அருகே உள்ள கீழக்குயில்குடி சமணர் படுகையில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 1.200 கிலோ கஞ்சா பிடிபட்டது.

வடிவேல்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் மனைவி பாண்டீஸ்வரி (வயது 30) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலக பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 1.100 கிலோ கஞ்சா பிடிபட்டது.

விருதுநகர் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்த காசிமாயன் (வயது 35) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News