செய்திகள்
தஞ்சை அருகே பள்ளி வேன் மோதி மூதாட்டி பலி
தஞ்சை அருகே பள்ளி வேன் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள மருங்குளத்தைச் சேர்ந்தவர் குஞ்சுபிள்ளை (வயது 60) விவசாய வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று குஞ்சுபிள்ளை வேங்கடராயன் குடிகாடு சென்றுள்ளார். அங்கு பஸ் நிலையத்தில் இருந்து ரோட்டை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் போலீசார் குஞ்சுபிள்ளையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள மருங்குளத்தைச் சேர்ந்தவர் குஞ்சுபிள்ளை (வயது 60) விவசாய வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று குஞ்சுபிள்ளை வேங்கடராயன் குடிகாடு சென்றுள்ளார். அங்கு பஸ் நிலையத்தில் இருந்து ரோட்டை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் போலீசார் குஞ்சுபிள்ளையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews