செய்திகள்
தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் இதில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்.தியாகராயா கல்லூரி வளாகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் கல்விச்சான்றிதலுடன், ஆதார் அட்டையையும் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews