search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job fair"

    • பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
    • நாளை காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்

    காஞ்சிபுரம்:

    படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (17-3-2023) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

    இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முகத் தேர்வினை நடத்த உள்ளனர். அதேசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    18 வயது முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (17-3-2023) காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது.
    • இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.

    இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார்.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, சுரங்கம், எண்ணை கழகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

    இந்த துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார்.

    ரோஜ்கர் மேளா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கான அரசின் முயற்சிகளில் முக்கியமான மைல்கல். இன்று 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    100 ஆண்டுக்கால வேலையின்மை மற்றும் சுய வேலைவாய்ப்பு பிரச்சினையை 100 நாட்களில் தீர்க்க முடியாது.

    கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் துறைக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் உதவியால் 1.5 கோடிக்கும் அதிகமான வேலை இழப்புகள் தவிர்க்கப்பட்டது. உற்பத்தி, சுற்றுலா துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த துறைகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

    உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது. கிராம புறங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் திருந்தி வாழ நினைக்கும் 155 முன்னாள் கைதிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. #Telangana #PrisonDepartment #Jobfair
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் சிறைத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிளிப்கார்ட், ஹெச்டிஎப்சி உள்பட 12 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் வீட்டு வேலை, டிரைவர், எலக்ட்ரீசியன், மார்கெட்டிங் எக்சிகியூடிவ், உதவியாளர்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது 



    தெலுங்கானாவின் 31 மாவட்டங்களில் இருந்து திருந்தி வாழ நினைக்கும் 230 முன்னாள் கைதிகள் இந்த முகாமில் பங்கேற்றனர். இதில் 155 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் வேலை பெறும் முன்னாள் கைதிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Telangana #PrisonDepartment #Jobfair
    ×