search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    பச்சையப்பன் ஆடவர் கல்லூரி

    காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    • பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
    • நாளை காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்

    காஞ்சிபுரம்:

    படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (17-3-2023) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

    இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முகத் தேர்வினை நடத்த உள்ளனர். அதேசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    18 வயது முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (17-3-2023) காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×