செய்திகள்

பேஸ்புக் காதலிக்கு திருமணமானதால் கோவை வாலிபர் தற்கொலை

Published On 2018-01-30 10:06 GMT   |   Update On 2018-01-30 10:06 GMT
கோவையில், பேஸ்புக் காதலிக்கு திருமணமான விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கோவை:

கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மகன் அரசகுமார் (வயது 26). இவர் பீளமேடு தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அரசகுமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக ஒரு இளம்பெண் அறிமுகமானார். அந்த இளம் பெண்ணை அரசகுமார் காதலித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணமானது. இதனால் கடந்த சில நாட்களாக அரசகுமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அரசகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News