செய்திகள்
கூடலூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய தொழிலாளி கைது
நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடலூர்:
கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கொட்டமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி விசுவநாதன் (வயது 37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அருள் பிரசாத் (37) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் பிரசாத் கம்பியால் விசுவநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த விசுவநாதன் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் தேவர்சோலை போலீசார் வழக்குபதிவு செய்து அருள்பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews