செய்திகள்
மதுரை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் 10 மாத குழந்தை தாயை இழந்து தவிக்கிறது.
மதுரை:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ளது புது ராமேசுவரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 22). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ரேணுகா தேவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் 10 மாத குழந்தை தாயை இழந்து தவிக்கிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ளது புது ராமேசுவரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 22). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ரேணுகா தேவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் 10 மாத குழந்தை தாயை இழந்து தவிக்கிறது.