செய்திகள்

ஆழ்வார்குறிச்சி அருகே ஆடுகளை திருடிய 2 பேர் கைது

Published On 2017-12-21 11:12 GMT   |   Update On 2017-12-21 11:12 GMT
ஆழ்வார்குறிச்சி அருகே ஆடுகளை திருடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராவுத்தர் பேரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று அதிகாலை வயலுக்கு சென்ற போது 2 பேர் 5 ஆடுகளை வெளியூருக்கு கடத்தி சென்றனர். அதில் ஒரு ஆடு இவருடைய ஆடு. இதனால் மாரியப்பன் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் 5 ஆடுகளையும் திருடி சென்றது தெரியவந்தது. அந்த ஆடுகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மாரியப்பன் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் காசிதர்மத்தை சேர்ந்த சுரேஷ் (20), கருப்பையா (65) ஆவர். அவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News