செய்திகள்
ஆழ்வார்குறிச்சி அருகே ஆடுகளை திருடிய 2 பேர் கைது
ஆழ்வார்குறிச்சி அருகே ஆடுகளை திருடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராவுத்தர் பேரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று அதிகாலை வயலுக்கு சென்ற போது 2 பேர் 5 ஆடுகளை வெளியூருக்கு கடத்தி சென்றனர். அதில் ஒரு ஆடு இவருடைய ஆடு. இதனால் மாரியப்பன் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 5 ஆடுகளையும் திருடி சென்றது தெரியவந்தது. அந்த ஆடுகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மாரியப்பன் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் காசிதர்மத்தை சேர்ந்த சுரேஷ் (20), கருப்பையா (65) ஆவர். அவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராவுத்தர் பேரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று அதிகாலை வயலுக்கு சென்ற போது 2 பேர் 5 ஆடுகளை வெளியூருக்கு கடத்தி சென்றனர். அதில் ஒரு ஆடு இவருடைய ஆடு. இதனால் மாரியப்பன் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 5 ஆடுகளையும் திருடி சென்றது தெரியவந்தது. அந்த ஆடுகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மாரியப்பன் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் காசிதர்மத்தை சேர்ந்த சுரேஷ் (20), கருப்பையா (65) ஆவர். அவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.