செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலி
பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 45). ராணுவ வீரர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், நிவேதா(13) என்ற மகளும், தீபக்வசந்த்(8) என்ற மகனும் உள்ளனர்.
இவர் தர்மபுரியில் ஒரு வீட்டை வாடகை வசித்து குடும்பத்துடன் வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாப்பாரபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்களை சந்தித்து விட்டு இரவு 7 மணியளவில் அவர் அங்கிருந்து தர்மபுரியில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் எரப்பட்டி முனியப்பன் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன் என்பது தெரியவந்தது. விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த கல்யாணராமனை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 45). ராணுவ வீரர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், நிவேதா(13) என்ற மகளும், தீபக்வசந்த்(8) என்ற மகனும் உள்ளனர்.
இவர் தர்மபுரியில் ஒரு வீட்டை வாடகை வசித்து குடும்பத்துடன் வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாப்பாரபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்களை சந்தித்து விட்டு இரவு 7 மணியளவில் அவர் அங்கிருந்து தர்மபுரியில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் எரப்பட்டி முனியப்பன் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன் என்பது தெரியவந்தது. விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த கல்யாணராமனை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.