search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collision"

    • இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
    • தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பெரிய பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோதியது. இதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின

    தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை குறித்த முழு விவரம் இன்னும் தெரிய வில்லை.  அங்கு மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.




    அமெரிக்காவில் பெரிய பாலம் இடிந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    https://www.instagram.com/reel/C4-IEy-JoWP/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

    • வடகலை, தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது. வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

    மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.

    இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக வடகலை-தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிரபந்தம் பாடப்பட்டது.

    வடகலை,தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விழுப்புரம்:

    கம்பத்திலிருந்து அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பஸ்சை தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு சொகுசு பஸ் லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுக்கியது.பஸ் கண்டக்டர் சென்னையைச் சேர்ந்த செல்வம் சிறுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மற்றொரு விபத்து : சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( வயது 47) ஓட்டி சென்றார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரியானது திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது இதனால் அரசு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு வரையும் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்த னர்.
    • பண்ருட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நத்தம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாரா யணன் மகன் சுனில்ராஜ் (வயது 16). இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி யில் படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி பள்ளி யில் விளையாடும் போது அதே பள்ளியில் படிக்கும் நவீன்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இரு வரையும் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை ராமபுரம் பஸ் நிறுத்தத்தில் 2 மாணவர்க ளும், சக மாணவர்களுடன் சேர்ந்து 2 கோஷ்டிகளாக பிரிந்து தாக்கி கொண்ட னர். அப்போதும் அங்கி ருந்த வர்கள் மாணவர் களை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்த னர்.

    பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பும்போது நவீன்குமாரின் நண்பர் களான சிரஞ்சிவி, ராகுல், தேவா, லோகேஷ்வரன் ஆகியோர், சக மாணவர்க ளான சுனில்ராஜ், ஜெயசந்தி ரன், ரவிசந்திரன், மோகேஷ் ஆகிய 4 பேரை தாக்கினர். இதில் காயமடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீ சார் சிரஞ்சிவி, ராகுல், தேவா, லோகேஷ்வ ரன், யோகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களி டையே அடிக்கடி மோதல் வருவது குறிப்பிடத்தக்க தாகும்.

    • இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை.
    • மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ஒப்பிலார் மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இரவு இவர் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு, மகன் திவ்யேஷ் கார்திக் (15), உறவினர் மகன் சரவண ப்பிரியன் (17) ஆகியோ ருடன் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். காரை க்கால் காமராஜர் சாலை கென்ன டியார் வீதி சந்திப்பில் சென்ற போது எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த அர்ஷாத் (19) என்பவர் மோதியதில், இருதரப்பும் தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    இதில், பாலசுப லட்சுமியின் 2 பற்கள் உடைந்து போனது. மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது. அர்ஷாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பாலசுபலட்மியை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீ சாரிடம் பாலசுபலட்மி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஷாத்தை விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார்
    • ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33). இவர் சோலையாறு அணை மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வருகி றார். இங்கு ராஜேந்திரன் (50) என்பவர் கிரேன் ஆபரேட்டரக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராமச்ச ந்திரன் பஜாருக்கு காரில் சென்றார். அப்போது அவர் அங்கு ராஜேந்திரனை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி வேலை நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கி றாய் என கேட்டார். அதற்கு ராஜேந்திரன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார். என்னிடம் சொல்லாமல் ஏன் வந்தாய் என ராமச்சந்திரன் கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நடுரோட்டில் வைத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    இது குறித்து உதவி என்ஜினீயர் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி செல்வி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது27). இவர் தனது நண்பர் பாலமுருகனோடு சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பாலமுருகன் பின்னால் அமர்ந்து சென்றார்.

    எதிர் திசையில் முதலிபட்டியை சேர்ந்த குருசாமி தனது தம்பி வருண்குமாருடன் (23) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பாலமுருகன் மற்றும் வருண்குமார் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வருண்குமார் மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்

    மேலூர் அருகே கீழவளவை அடுத்துள்ள உடன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா என்ற சோனை காளை(வயது23). நேற்று இரவு தனது நண்பர்கள் நாகராஜ், முத்துக்குமார் ஆகியோருடன் கீழவளவில் இருந்து உடன்பட்டிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரைக்குடியில் இருந்து முத்துக்குமார் என்பவர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீழவளவு போலீஸ் நிலையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது.
    • எதிர்பாரத விதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் நேற்று இரவு செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. பெரம்பலூரியில் இருந்து பூம்புகார் நோக்கி செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அரியலூர் மாவட்டம் ஆமணக்கு தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஒட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (வயது 33) என்பவர் மாற்று டிரைவராக பணியில் இருந்தார். இந்நிலையில் பெரம்பலூரில் இருந்து பூம்புகார் நோக்கி சென்ற லாரி எதிர்பாரத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

    இதில் ஆனஸ்ட் ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    சேலத்திலிருந்து சென்னைக்கு கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ராமச்ச ந்திரன் ஓட்டி வந்தார். இந்த டேங்கர் லாரி திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது சாலையைக் கடக்க முயன்ற டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டரின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.

    இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
    • மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதிவேகமாக வந்த கார்

    அப்போது அந்தப் பகு

    தியில் உள்ள ஒரு பெட்ரோல்

    பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கைது

    இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் இவரது பேத்தி மைஸிகாபேரன் சர்வன் ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    அன்னதானப்பட்டி;

    சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). இவரது பேத்தி மைஸிகா (9), பேரன் சர்வன் (5) ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நடராஜன் தனது பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×