செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்கு

Published On 2017-12-08 05:52 GMT   |   Update On 2017-12-08 05:53 GMT
அ.தி.மு.க. வாகனத்தை தாக்கியதாக தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராயபுரம்:

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 45). இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவர் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மண்ணப்ப முதலி தெருவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது கார் மீது தினகரன் ஆதரவாளர்கள் சோடா பாட்டில் மற்றும் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இது தொடர்பாக காந்தி, கொருக்குபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஒரத்த நாடு முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், தஞ்சாவூர் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேஸ்வரன், குலோத்துங்கன், கல்லம்பட்டி செல்வம், கோவி மனோகரன் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News