செய்திகள்

திருவொற்றியூரில் மகன்-மகள்கள் கவனிக்காததால் 70 வயது முதியவர் தற்கொலை

Published On 2017-11-24 09:08 GMT   |   Update On 2017-11-24 09:08 GMT
திருவொற்றியூரில் மகன்-மகள்கள் கவனிக்காததால் 70 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர், ராம கிருஷ்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 70). இவரது மனைவி இந்திராணி.

இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

கணபதியும், இந்திராணியும் தனியாக வீட்டில் தங்கி இருந்தனர். அவர்களை மகன்கள், மகள்கள் சரிவர கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் மிகவும் கவலை அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்திராணிக்கு திடீரென உடல் நலக்குறைவு எற்பட்டது. அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகன்கள், மகள்கள் கவனிக்காத நிலையில் மனைவியும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கணபதி மனவேதனை அடைந்தார். அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News