செய்திகள்

தென்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Published On 2017-11-21 02:53 GMT   |   Update On 2017-11-21 02:54 GMT
கன்னியாகுமரி அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் தென்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்மாவட்டங்களில் மழை லேசாகத்தான் பெய்தது. இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News