ராசிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் கொள்ளை முயற்சி
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவில் வழக்கமாக காலை 8 மணிக்கு திறக்கப்படும். கோவில் அர்ச்சகராக பாபு என்பவர் இருந்து வருகிறார்.
இன்று காலையில் வழக்கம் போல் நடை திறப்பதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பு பகுதி மெயின் கேட்டின் பூட்டப்பட்டிருந்த 3 பூட்டுகளும் உடைந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவிலுக்குள் சென்று பார்த்தார்.
அங்கிருந்த பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே, நள்ளிரவு வேளையில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். அந்த கதவு உடைக்க முடியவில்லை. அதில் இருந்த பூட்டையும் உடைக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. உண்டியலில் இருந்த பணம் கொள்ளை போனதா? என தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.