செய்திகள்

திருச்சி நெ.1 டோல்கேட்டில் 8-ந்தேதி காங்கிரஸ் சார்பில் கருப்பு தினநாள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-06 13:21 GMT   |   Update On 2017-11-06 13:21 GMT
வருகிற 8-ந்தேதி மத்திய அரசின் பண மதிப்பு நீக்கத்தால் பொதுமக்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு தினநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருச்சி:

திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 8-ந்தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு மத்திய அரசின் பண மதிப்பு நீக்கத்தால் பொதுமக்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டித்து கருப்பு தினநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை நெ.1 டோல்கேட் டில் 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி. எம்.எல். ஏக்கள் அனைத்து நகர, வட்டார, பேரூர் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளான தொழிற்சங்க காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, சேவாதளம், மகிளா காங்கிரஸ், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் இதில் திரண்டு பங்கேற்க வேண்டும்.

கருப்பு தினநாள் போராட்டத்தை வெற்றி பெற செய்து மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வழிகாட்டுதலில் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் வலிமையான நல்லாட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.

இவ்வாறு திருச்சி கலை கூறியுள்ளார்.
Tags:    

Similar News