செய்திகள்

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2017-11-01 10:20 GMT   |   Update On 2017-11-01 10:20 GMT
கொடைக்கானலில் குட்டியுடன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுபன்றி, முயல், மான், யானை, சிறுத்தை உள்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அரிய வகை மூலிகைகளும், மரங்களும் உள்ளன. வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மலைகிராம விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் பழமையான குடிநீர் தேக்கம் உள்ளது. இதன் அருகே வனவிலங்குகள் தண்ணீர் தேடி உலாவருவது உண்டு. மனோரத்தினம் சோலை அணை மற்றும் குடிநீர் தேக்கத்தையொட்டி வனப்பகுதிகள் உள்ளன.

சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் இந்த பகுதியில் நடமாடியது. அதன்கால் தடத்தை பார்த்ததும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை மற்றும் குட்டி வந்து சென்றதை கால்தடத்தை வைத்து அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் அப்பகுதியில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News