செய்திகள்

பெரியகுளம் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு

Published On 2017-10-28 17:47 GMT   |   Update On 2017-10-28 17:47 GMT
பெரியகுளம் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பெருமாள் புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ். (வயது 20). இவர் சம்பவத்தன்று வடகரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார். அப்போது 4 வாலிபர்கள் அவரிடம் வந்து மது குடிக்க பணம் கேட்டனர். விக்னேஸ் பணம் தர மறுக்கவே அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து விக்னேஷ் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த பழனி கோதை மங்கலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த மூர்த்தி, பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த கண்ணன், தென்கரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி, அஜித்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News